மாகாணசபை உறுப்பினர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இரு தேசியமொழிகளுள் ஏதேனுமொன்றை ஒன்றினைப் பயன்படுத்தக்கூடியதாக உறுப்புரை 20ற்கான திருத்தம்.
சிங்களத்தையும் தமிழையும் நிர்வாக மொழிகளாகவும் சட்டவாக்க மொழிகளாகவும் ஆக்குவதற்காக உறுப்புரைகள் 22 மற்றும் 23 னை பதிலீடு செய்தல்.
சிங்களத்தையும் தமிழையும் நீதிமன்ற மொழிகளாக ஆக்குவதற்காக உறுப்புரை 24ற்கான திருத்தம்.
வேறு ஏதாவது சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாமை ஏற்படுகையில், இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேலோங்கி நிற்கச் செய்வதற்காக உறுப்புரை 25 அ வினை உட்சேர்த்தல்.