இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் தலைமையதிபதியை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

திகதி : 2024-10-14

2023 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் (திருத்தத்தின் பிரகாரம்) ஏற்பாடுகளுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் தலைமையதிபதியை தெரிவு செய்வதற்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பங்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் “இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் தலைமையதிபதியை நியமித்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வடிவில் தயாரித்தல் வேண்டும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசியலமைப்புச் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புச் பேரவை - அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு பதிவுத் தபாலிலோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2024 ஒக்டோபர் 28 அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

இது தொடர்பில் பத்திரிகை அறிவித்தல் இம்மாதம் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/315

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom