பாராளுமன்ற உணவகத்தில் பணியாளர்கள் இருவர் மத்தியில் 2024.08.06 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து ஊடகங்கள் அறிக்கையிட்டமை தொடர்பானது |
திகதி : | 2024-08-08 |
பாராளுமன்ற உணவகத்தில் பணியாளர்கள் இருவருக்கிடையில் 2024.08.06 ஆம் திகதி பணியாற்றும் நேரத்தில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் காரணமாக கத்திக் குத்துவரை சென்றதாக நேற்று (2024.08.07) ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளமை குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உணவகத்தில் பணியாற்றும் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதில் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொள்ள முயற்சித்தமை குறித்த சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென்றும், ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவத்தை மிகைப்படுத்தி அறிக்கையிடுவதன் மூலம் இந்நாட்டில் உள்ள அதியுயர் நிறுவனமான பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடும் போது அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம் என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் வலியுறுத்தினார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






