தொழில்முயற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு விஜயம் |
திகதி : | 2024-07-22 |
இலங்கையில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்முனைவுத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முயற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
பாராளுமன்றக் கட்டடத்தின் கட்டடக்கலையின் மதிப்பு மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து இந்தக் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினர். பாராளுமன்றத்தில் சபாநாயகரின் வகிபாகம் மற்றும் அவருடைய அனுபவம், பாராளுமன்ற முறைமைகள் மற்றும் சம்பிரதாயம், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற முறைமையில் காணப்படும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தொழில்முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் இங்கு பதில் வழங்கப்பட்டது.


விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






