2024 மார்ச் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-03-07

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : 2024 சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருவது தொடர்பாக


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(v) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 07 ஆம் திகதிய 2370/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போக்குவரத்து அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)        2022 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் மதியுரையின் மீதும் விதப்புரையின் மீதும் அச்சட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 7 ஆம் பிரிவின் கீழ் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் உரிமமளித்தல் தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 10 ஆம் திகதிய 2340/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1720 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.