இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-07-09

கெளரவ எட்வர்ட் குணசேகர அவர்களுக்கு "ரஞ்ஜித் அலுவிஹாரே மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கெளரவ சரத்சந்திர ராஜகருணா அவர்களுக்கு "இலங்கை செமட்ட செத மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம், 2ஆம் மற்றும் 30ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:- (i) கரையோரக் காவல் திணைக்களச் சட்டமூலம் (திருத்தங்களுடன்) (ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 114, நிகழ்ச்சித்திட்டம் 2 (போக்குவரத்து அமைச்சு) (iii) வண. முணமலே தம்மரதன ஞாபகார்த்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'ரஜரட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் வசதிகளின்மை' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஸம்மில் மொஹமட் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1458 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜூலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom