இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் போதி பூஜை

திகதி : 2022-01-04

2022 புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு இன்று (04) முற்பகல் இடம்பெற்றது.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜையை கோட்டே சுனேத்ராராமாதிபதியும் கொழும்பு, களுத்துறை பகுதிகளின் தலைமை தேரரும், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக ஆளுநர் சபை அங்கத்தவரும், கல்வி அமைச்சின் பௌத்த ஆலோசகர் குழுவின் உறுப்பினருமான நாலந்தா பல்கலைக்கழக தர்மாச்சாரியார் வணக்கத்துக்குரிய அலிக்கேவெல சீலானந்த தேரர் நடாத்தினார்.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சி முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   

பாராளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன் நோக்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் வரவேற்புரையை அதன் தலைவர் ஷாந்த வீரரத்ன நிகழ்த்தினார்.

 

1 2

3 4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom