கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் துனீசியத் தூதுவர் |
திகதி : | 2021-12-27 |
|
இலங்கைக்கான துனீசியத் தூதுவர் மதிப்புக்குரிய திருமதி. ஹெயட் டல்பி பிலேல், கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார். மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியுமான திருமதி. குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.