இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-10-07

கெளரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபையின் இன்றைய தினத்திற்கான பிரதான பணிகள்

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும்,தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட ( 40 ஆம் அத்தியாயமான ) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி யவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 ஒற்றோபர் மாதம் 02 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கனும் நடைமுறைப் படுத்தப்படவேண்டுமென்று கெளரவ பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 84 பெரும்பாண்மை வாக்குகளினால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் அதற்கு எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


இன்றைய தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தின் 35,36,37 ஆம் இலக்க விடயங்களும் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


அதன் பின்னர், சபை 1634 மணிக்கு 2008 ஒக்டோபர் 08 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom