இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது

திகதி : 2020-11-12

2020 நிதி ஒதிக்கீட்டுச்சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் இன்று (12) நிறைவேற்றப்பட்டது.

கௌரவ பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இன்று முற்பகல் ஆரம்பித்துவைத்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்  எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் பல முன்வைக்கப்பட்டு 2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேறியது.

2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 17ஆம் திகதி கௌரவ பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom