இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2020-10-22

“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் இன்று (ஒக் 22) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இது நீதி அமைச்சரினால் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்றும் தொடரப்பட்டது.

சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 156; எதிராக 65). குழுநிலையைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 156; எதிராக 65; விலகியிருந்தோர் 0; சமுகமளிக்காதோர் 01) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom