ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவு |
திகதி : | 2020-08-20 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் உறுதியுரையெடுத்துக்கொண்டார்.
சபாநாயகர் பதவிக்கு கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.
புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க சபையில் வாசித்தார். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்யுமாறு அவர் அறிவித்ததும் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







