இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவு

திகதி : 2020-08-20

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் உறுதியுரையெடுத்துக்கொண்டார்.

சபாநாயகர் பதவிக்கு கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.

புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க சபையில் வாசித்தார். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்யுமாறு அவர் அறிவித்ததும் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

 

new-speaker-mahinda-yapa-abeywardana

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom