[ஊடக அறிக்கை] தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி |
திகதி : | 2019-10-16 |
தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று (15) தீர்மானித்தது.
திரு. மஹிந்த தேசப்பிரியவைத் தலைவராகக் கொண்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு சமன் ஸ்ரீ ரத்னாயக்கவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தது.
அதேநேரம், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கடமையாற்றிவரும் திரு. எம்.ஆர்.சி. பெர்னான்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்தது.
இந்த நியமனத்துக்கான முன்மொழிவை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைத்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமையில், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) மாலை கூடியது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






