இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

[ஊடக அறிக்கை] தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி

திகதி : 2019-10-16

தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று (15) தீர்மானித்தது.

திரு. மஹிந்த தேசப்பிரியவைத் தலைவராகக் கொண்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு சமன் ஸ்ரீ ரத்னாயக்கவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தது.

அதேநேரம், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கடமையாற்றிவரும் திரு. எம்.ஆர்.சி. பெர்னான்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்தது.

இந்த நியமனத்துக்கான முன்மொழிவை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைத்திருந்தார்.

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமையில், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) மாலை கூடியது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom