இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதுப்பிக்கப்பட்ட ஊடக நிலையத்தின் திறப்பு

திகதி : 2019-09-30

பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதிக்காக புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்ற ஊடக நிலையம் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் 2019 செப்டெம்பர் 30ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

 

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) அமைப்பினால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட ஊடக நிலையமானது சகல வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையகம், செவிப்புல மற்றும் வீடியோ கலவை, தொலைநகல் இயந்திரங்கள், அச்சுப்பொறிகள் மற்றும் இணையம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களின் செய்திகளை தொகுக்கும் பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு தாம் இருக்கும் இடத்திலிருந்தே அந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஊடக நிலையமானது இடைவெளியைக் குறைத்து, பாராளுமன்றத்தை நாட்டின் பொதுமக்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க, பாராளுமன்ற அலுவலர்கள், பத்திரிகை பதிப்பாசிரியர்கள், இலத்திரனியல் ஊடக தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற செய்தியாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

1 2

 

34

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom