இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மதிப்பீடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கல்

திகதி : 2019-07-08

2018 ஆம் நிதி ஆண்டுக்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மேற்பார்வைக்கு உட்படும் நிறுவனங்களின் நிதி செயலாற்றுகை மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள கணனி தகவல் முகாமைத்துவ முறைமையின் இரண்டாவது கட்டத்தை வெளியிட்டு வைத்தல் மற்றும் 2017 ஆம் நிதி ஆண்டுக்கான அதிக செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களை மதித்து கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருது வழங்கும் வைபவம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மேற்பார்வைக்கு உட்படும் சகல அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் கலந்து கொள்ளளுடன் 2019 ஜூலை 05 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற எதிர்க் கட்சி முதற்கோலாசான் கௌரவ மஹிந்த அமரவீர மற்றும் இக்குழுவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2017 ஆம் நிதி ஆண்டுக்கான விசேட செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களின் 108 தலைவர்கள் இந்நிகழ்வின் போது விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom