சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு மல்வத்த மகா விகாரையினால் கௌரவ விருது |
திகதி : | 2019-03-21 |
சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு மல்வத்த மகாபீட மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்கசபையினரால் “விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான சான்றுப் பத்திர கையளிப்பானது மார்ச் 19ஆம் திகதி மல்வத்த மகாபீட திருவிடத்தில் இடம்பெற்றது.
இதற்கு முன்னர் இலங்கை ராமன்ய நிக்காயவினால் “விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” கௌரவ விருதும், “சாரார்த தர்ஷி ஜனதா நாயக” கௌரவ விருதும் கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
யப்பான் பேரரசினால் வழங்கப்படுகின்ற யப்பானின் உயர் விருதான “Rising Sun” (உதய சூரியன்) விருதானது கடந்த வருடம் கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்தியாவினால் 2017ஆம் ஆண்டில் “விஷ்வ சாம” விருதும், அண்மையில் அப்துல் கலாம் விஞ்ஞான நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற “Pride Of Asia” (ஆசியாவின் பெருமை) விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











