இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம்

திகதி : 2018-12-12

பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கும் வைபவம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் ஆதரவுடனும் வருகையுடனும் 2018 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 2017 ஆம் ஆண்டு இதன் ஆரம்ப வைபவம் நடைபெற்றதுடன் இது பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் நலனோம்புகை மற்றும் விசேட கருத்திட்டங்களுக்கான குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பிள்ளைகளுக்கு எழுதுகருவிகள், புத்தகங்கள், பாடசாலை பைகள், பாதணிகள் போன்றனவற்றுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியிலான பரீட்சைகளில் திறமைகாட்டியோரை அவர்களது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஊக்குவிப்பதற்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

 

பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர்கள் நாயகம், திணைக்கள தலைவர்கள், பணியாட்டொகுதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

1 2

3 4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom