முதல் முறையாக பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை |
திகதி : | 2017-07-25 |
இன்று சபையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை பயன்படுத்தப்பட்டது. “வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம்” இன் மூன்றாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோதே இது பிரயோகத்திற்கு வந்தது.
2016 டிசம்பர் 10ஆம் திகதி, 2017 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் பின்னர் இம்முறைமை பரீட்சாத்தம் செய்யப்பட்டது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கங்கள் 42, 43 மற்றும் 44 என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றத்தின் இக்கூட்டத் தொடரின் போது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை உபயோகித்து பாராளுமன்றத்தில் வாக்களிப்பை மேற்கொள்ள இயலுமென இப்பாராளுமன்றம் 2017 ஜூலை 5ஆம் திகதி தீர்மானித்தது. இது தொடர்பான தேவையான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






