முன்னாள் பிரதம அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல், அரச மரியாதைக்காக பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு |
திகதி : | 2016-12-28 |
முன்னாள் பிரதம அமைச்சர், காலஞ்சென்ற கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல், அரச மரியாதைக்காக இன்று (டிசம்பர் 28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு கொண்டுவரப்பட்டது. பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் ஒன்றுகூடல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு கௌரவ சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாராளுமன்ற செயலக பணியாளர்களினால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திரு. விக்கிரமநாயக்க அவர்கள், 36 வருடத்திற்கு மேற்பட்ட பாராளுமன்ற சேவைக் காலத்திற்கு உரிமை கோருகின்ற ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாவார். 1960ஆம் ஆண்டு ஹொரண ஆசனத்தை பிரதிநிதித்துவம் செய்து முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு (சனப் பிரதிநிதிகள் சபை) தெரிவு செய்யப்பட்ட அன்னார் அதன் பிற்பாடு தனது அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளார். பிரதம அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக, பாதுகாப்பு, புத்தசாசன, பொது நிருவாகம், பெருந்தோட்டக் கைத்தொழில் போன்ற முக்கியமான அமைச்சுப் பதவிகள் பல அவர்களினால் வகிக்கப்பட்டுள்ளன. 1994 ஆகஸ்ட் முதல் 2000 ஒக்டோபர் வரை பாராளுமன்ற சபை முதல்வர் பதவியையும், 2001 டிசம்பர் முதல் 2002 ஜனவரி வரை குறுகிய காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். அன்னார் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விதுற விக்கிரமநாயக்க அவர்களின் தந்தையும் ஆவார்.
திரு. விக்கிரமநாயக்க அவர்களின் இறுதிச் சடங்கு பூரண அரச அனுசரணையுடன் 2016 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












