பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினருக்குமான அடியீடுமானிகள் பகிர்ந்தளிப்பு |
திகதி : | 2016-06-08 |
“ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை மேம்படுத்தல்” எனும் பயிற்சி பட்டறை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை நாட்டுக்கான காரியாலயம் ஆகியவற்றுடன் இணைந்து பாராளுமன்ற நிருவாக பணியாட்டொகுதி சங்கமானது (PASU) 2016 ஜூன் 8ஆம் திகதியன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் குழு அறை இல. 01 இல் ஒழுங்கு செய்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலக பணியாட்டொகுதியினர் மற்றும் ஏனைய பாராளுமன்ற பணியாட்கள் ஆகியோரின் சுகாதார நிலையினை மேம்படுத்துவதே இப்பயிற்சி பட்டறையின் பிரதான குறிக்கோளாகும். இந்நிகழ்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலக பணியாட்டொகுதியனருக்கு அடியீடுமானிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், சுகாதாரக் கல்வி செயலகத்தினால் தொகுக்கப்பட்ட “பாராளுமன்ற திரையிடல் முடிவுகள்” எனும் அறிக்கை, “பணியிட உணவக வழிகாட்டு நெறிகள்” மற்றும் “உணவுப்பட்டியலுக்கான வழிகாட்டி” என்பன கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்














