இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-02-20

2015, பெப்ரவரி 19ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 மார்ச் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 மார்ச் 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2015.02.19 ஆம் திகதிய 435ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 மார்ச் 04 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 மார்ச் 05 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்)
 

2015 மார்ச் 06 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தல் தொடர்பாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் 2015.02.18 அன்று நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினா சம்பந்தமாக உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் அவர்களால் 2015.02.19 அன்று வழங்கிய கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom