இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

510/2025

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சணச அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குறுத்தலுக்கு உட்பட்டதா;

(ii) சணச அபிவிருத்தி வங்கி மூலம் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் களுக்கு "உத்தமாசார" என்ற பெயரில் கடன் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா;

(iii) அதன் கீழ் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;

(iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;

(v) கடன் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற ஓய்வூதிய சம்பள வீதம் யாது;

(vi) கடனை மீளச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மற்றும் உச்சளவான காலஎல்லை யாது;

என்பதை அவர் தொிவிப்பாரா?

(ஆ) (i) கொவிட்-19 தொற்றுக் காலத்தில் கடனை அறவிட்டுக் கொள்ளும் காலஎல்லை நீடிக்கப்பட்டதன் மூலம் கடன் தொகையை விடவும் கூடுதலான தொகையை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;

(ii) மேற்படி கால நீடிப்பு வங்கியின் தற்றுணிவின் போில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;

(iii) வங்கியின் தற்றுணிவின் போில் அவ்வாறு நீடிப்புச் செய்யப்பட முடியுமா;

(iv) அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படுமா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom