கிட்ணன் செல்வராஜ் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

Print

505/2025

கௌரவ கிட்ணன் செல்வராஜ்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெருந்தோட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதை அறிவாரா;

(ii) 1992 ஆம் ஆண்டின் பின்னர் அரச மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் (TRUST) பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிநீர் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

(iii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் செலவிடப்பட்ட பணத்தொகை மற்றும் தற்போதைய நிலைமை வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பதுளை மாவட்டத்தின், பூனாகல LLG, கெப்கடை புதிய குடியிருப்புத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் கருத்திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு;

(iii) இன்றளவில் இந்நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதா;

என்பதையும் அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
: கிட்ணன் செல்வராஜ்
: தேசிய மக்கள் சக்தி