498/2025
கௌரவ அனுராத ஜயரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 ஆம் ஆண்டில் வன விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட பயிர்ச் சேதங்களின் அளவு யாதென்பதையும்;
(ii) அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நட்டம் யாதென்பதையும்;
(iii) வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களை குறைப்பதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பயிர்ச் செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றின் விலை ரூ.450/- ஆக காணப்படுவதை அறிவாரா என்பதையும்;
(iii) அதன் காரணமாக விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : சட்டத்தரணி அநுராத ஜயரத்ன |