சுசந்த குமார நவரத்ன அவர்களினால் கேட்கப்பட்ட வினா

Print

495/2025

கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மிகிந்தலை கமநல சேவைகள் ஆளுகைப் பிரதேசத்தில், வரையறுக்கப்பட்ட ஜனதா லங்கா மிளகாய் சந்தைப்படுத்தல் கம்பனி நிறுவப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;

(ii) 2001 ஆம் ஆண்டில் மிகிந்தலை கமநல சேவைகள் வங்கியினால் மேற்படி கம்பனிக்கு ரூ.1,275,000/- கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

‍(iii) ஆமெனில், அக்கடன் தொகை வழங்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

(iv) மேற்படி கடன் தொகை மீள அறவிடப்படுமா என்பதையும்;

(v) ஆமெனில், அறவிடப்படும் அடிப்படை யாதென்பதையும்;

(vi) மேற்படி கடன்தொகைக்காக அறவிடப்பட வேண்டிய ரூ. 1,975,233/- வட்டித் தொகையை அறவிடப்படாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(vii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: சுசந்த குமார நவரத்ன
: தேசிய மக்கள் சக்தி