இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்மசிரி பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

450/2025

கௌரவ பத்மசிறி பண்டார,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில் அமைந்துள்ள 42 கடை அறைகளின் திறப்பு விழா சார்ந்த ஊடக பிரசித்தப்படுத்தலுக்கான மொத்த செலவாகிய ரூ.19,301,403.61 தொகையிலிருந்து ரூ.17,639,938.86 பணத்தொகை டி.ஆர்.ஐ.ஏ.டீ.நிறுவனத்துக்கு முற்பணமாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இவ்விடயத்தில் பெறுகை நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) மேற்படி முற்பணத் தொகையை செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர் யாரென்பதையும்;

(iv) மேற்படி ஊடக பிரசித்தப்படுத்தலுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பெருமளவு பணத்தொகை செலவு செய்யப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

(v) மேற்படி விழாவையொட்டி ஊடக பிரசித்தப்படுத்தல் செய்யப்பட்டதெனில் அத்தகைய பிரசித்தப்படுத்தல் அரச ஊடக நிறுவனமொன்றின் வாயிலாக மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: பத்மசிரி பண்டார
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom