இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவீந்திர பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

440/2025

கௌரவ ரவீந்திர பண்டார,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பண்டாரவளை பொது விளையாட்டரங்கு (நகர சபை விளையாட்டரங்கு) விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு உகந்த நிலையில் காணப்படவில்லை என்பதையும்;

(ii) மேற்படி விளையாட்டரங்கில் நீர் வழிந்தோடுவதற்கு முறையான வழிமுறையொன்று இல்லை என்பதையும்;

(iii) அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகாலமைப்பின் காரணமாக கிரிக்கட் போட்டிகளை நடாத்த முடியாதுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேற்படி விளையாட்டரங்கை நவீனமயப்படுத்த செலவிடப்பட்ட தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;

(ii) மேற்படி விளையாட்டரங்குக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சம்பந்தமான விசாரணை நடாத்தப்படுமா என்பதையும்;

(iii) பண்டாரவளை பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்தக் கூடியவகையில் மேற்படி விளையாட்டரங்கை நவீனமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், அது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
: ரவீந்திர பண்டார
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom