இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

433/2025

கௌரவ தினிந்து சமன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை, மீகஹகிவுல புதிய நகர நிர்மாணத்திற்கு இணையாக மீகஹகிவுல பஸ்தரிப்பிடத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாது;

(ii) இதுவரை மேற்படி பஸ்தரிப்பிடம் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அறிவாரா;

(iii) அவ்வாறாயின் அதற்கான காரணங்கள் யாவை;

(iv) மேற்படி பஸ்தரிப்பிடத்தை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(v) மேற்படி பஸ்தரிப்பிடத்திற்கான நுழைவுப் பாதையை நிர்மாணிக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் தொிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி பஸ்தரிப்பிடம் பயனற்ற ஒரு நிர்மாணம் என்பதை ஏற்றுக்கொள்வாரா?

(ii) அவ்வாறாயின், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iii) எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் ஏற்படாமலிருக்க உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் வழிகாட்டல்கள் யாவை;

என்பதை அவர் மேலும் தொிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: தினிந்து சமன் ஹென்னாயக்க
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom