இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இம்ரான் மகரூப் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

429/2025

கௌரவ இம்ரான் மகரூப்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைப் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவு தாபிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவு தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக நிறுவப்படவில்லை என்பதையும்;

(ii) கிண்ணியா பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக நிறுவுவதற்கான பிரேரணையை உள்ளூராட்சி ஆணைக்குழு அங்கீகரித்துள்ளபோதிலும், இப்பிரேரணையானது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாகவும், கிண்ணியா பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாகவும் நிறுவுவதில் காணப்படும் தடைகள் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) திருகோணமலை மாவட்டத்தின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற அதேவேளை சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 100 குடும்பங்கள் மாத்திரமே வாழ்கின்றார்கள் என்பதை அறிவாரா;

(ii) ஆமெனில், இந்த சமநிலையற்ற நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: இம்ரான் மகரூப்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom