இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இம்ரான் மகரூப் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

428/2025

கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு 'ஏ' தரம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இருப்பினும், 'ஏ' தரத்திற்கு ஏற்றவாறு பௌதீக வளங்கள் இற்றைவரையில் இவ்வைத்தியசாலைகளுக்குப் வழங்கப்படவில்லை என்பதையும்;

(iii) மேற்படி வைத்தியசாலைகளுக்கு போதிய ஆளணி வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வைத்தியசாலைகளுக்குத் தேவையான பெளதீக வளங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது கடமையாற்றிவரும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை;

(iii) மேற்படி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iv) கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவராமைக்கான காரணங்கள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: இம்ரான் மகரூப்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom