இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இம்ரான் மகரூப் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

425/2025

கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024.01.01 தொடக்கம் 2024.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) குறித்த காலப்பகுதியினுள் கட்டாக்காலி நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கை மேற்படி மாவட்டத்தின் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கமைய வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iv) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு அதிகமாக ஆளாகிய நபர்கள் வசிக்கும் மாவட்டம் யாதென்பதையும்;

(v) நாய்க்கடிக்கு ஆளாகின்ற நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வருடாந்தம் செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(vi) நாய்க்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: இம்ரான் மகரூப்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom