420/2025
கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள காடுகளின் அளவு ஏக்கர்களில் யாதென்பதையும்;
(ii) அவற்றுள் காட்டு யானைகள் வாழ்வதற்கு பொருத்தமான சூழலைக் கொண்ட காடுகளின் அளவு ஏக்கர்களில் யாதென்பதையும் ;
(iii) அக்காடுகளில் வாழும் காட்டு யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) காட்டு யானைகள் மனிதர்களுக்கும், அவர்களுடைய உடைமைகளுக்கும் அழிவை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;
(v) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை காட்டு யானைகளால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அத்தாக்குதல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் யானை-மனித மோதல் காரணமாக இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) காடுகளின் அடர்த்தியை விடவும் அதிகமான காட்டு யானைகள் காடுகளில் வாழ்வதை அறிவாரா என்பதையும்;
(ii) காடுகளின் அடர்த்திக்கு ஏற்ப காட்டு யானைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான பொறிமுறைகள் யாதென்பதையும்;
(iv) அது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(v) ஆமெனில், காட்டு யானைகளால் ஏற்படும் அழிவுகளை கட்டுப்படுத்த ஏதேனுமொரு வழிமுறை உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுற்றாடல் | |
| : ஞானமுத்து ஸ்ரீநேசன் | |
| : இலங்கை தமிழ் அரசு கட்சி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






