இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அருண பனாகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

418/2025

கௌரவ அருண பனாகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிட்டிப்பன, மாஹேனவத்த பிரதேசத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று இதற்கு முன்னர் இருந்ததா என்பதையும்;

(ii) இன்றேல், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று அப் பிரதேசத்தில் உள்ளதா என்பதையும்;

(iii) அக்காணியானது எவரேனுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) இன்றேல், இதனை விற்பனை செய்வதற்கான ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என்பதையும்;

(v) அக்காணி விற்பனை செய்யப்பட்டிருப்பின், விற்பனை செய்யப்பட்ட மொத்தப் பணத்தொகை யாதென்பதையும்;

(vi) மேற்படி காணியின் பர்சஸ் ஒன்றின் பெறுமதி யாதென்பதையும்;

(vii) அரசின் நடவடிக்கைகளுக்கு காணிகள் தேவையாக இருக்கும் நிலையில், அக்காணியை ஒரு வெளித் தரப்புக்கு விற்பனை செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(viii) அக்காணியை மீண்டும் அரசாங்கத்துக்கு சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: அருண பனாகொட
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom