இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அருண பனாகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

417/2025

கௌரவ அருண பனாகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஹோமாகம, மத்தேகொட வீடமைப்புக் கட்டிடத் தொகுதியின் மலக்கழிவு அகற்றும் முறைமை பல வருடங்களாக செயலிழந்துள்ளது என்பதையும்;

(ii) தற்போது மேற்படி மலக்கழிவு அகற்றும் முறைமையைச் சுற்றி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேலியொன்றை நிர்மாணித்து வருகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வேலியை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) அதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த திகதி மற்றும் நிறைவு செய்ய வேண்டிய திகதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) அதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் யாதென்பதையும்;

(iv) மேற்படி ஒப்பந்த நிறுவனத்தை தெரிவு செய்யும்போது, உரிய கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) மேற்படி வேலியை நிர்மாணிப்பதால் பொதுமக்கள் சுமார் 40 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்ற வீதிக்கு அது முழுமையாக இடையூராக உள்ளதை அறிவாரா என்பதையும்;

(vi) ஆமெனில், மேற்படி நிலைமையைச் சீர்செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: அருண பனாகொட
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom