417/2025
கௌரவ அருண பனாகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹோமாகம, மத்தேகொட வீடமைப்புக் கட்டிடத் தொகுதியின் மலக்கழிவு அகற்றும் முறைமை பல வருடங்களாக செயலிழந்துள்ளது என்பதையும்;
(ii) தற்போது மேற்படி மலக்கழிவு அகற்றும் முறைமையைச் சுற்றி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேலியொன்றை நிர்மாணித்து வருகின்றது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வேலியை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) அதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த திகதி மற்றும் நிறைவு செய்ய வேண்டிய திகதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் யாதென்பதையும்;
(iv) மேற்படி ஒப்பந்த நிறுவனத்தை தெரிவு செய்யும்போது, உரிய கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்படி வேலியை நிர்மாணிப்பதால் பொதுமக்கள் சுமார் 40 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்ற வீதிக்கு அது முழுமையாக இடையூராக உள்ளதை அறிவாரா என்பதையும்;
(vi) ஆமெனில், மேற்படி நிலைமையைச் சீர்செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு | |
| : அருண பனாகொட | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






