இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

390/2025

கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் அப்போதைய பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி குழுவை நிறுவுவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) அக்குழுவில் இடம்பெற்றிருந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(v) ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டபோது அவ் அலுவலகத்திற்குக் கிடைத்திருந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(vi) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அவ் ஊழல் எதிர்ப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய நபருடைய பெயர் மற்றும் முகவரி யாவை என்பதையும்;

(ii) அவர் அனுமதியின்றி வாகனத்தைச் செலுத்தி அதனை விபத்திற்குள்ளாக்கியதை அறிவாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பிரதம அமைச்ச
: சாமர சம்பத் தசனாயக
2025-03-06 ஆம் திகதி 2 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom