இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சானக மாதுகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

387/2025

கௌரவ சானக மாதுகொட,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி துறைமுக வளவில் காணப்பட்ட அரச மரம் அழிவடைந்ததன் காரணமாக அதற்குப் பதிலாக புனித ஜயஸ்ரீ மகா போதிமரக் கன்று ஒன்றை நடுவது குறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நிருவாகத்தினருக்கு இடையே தோன்றியுள்ள கருத்துவேறுபாடு பற்றி அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி அரச மரக் கன்றை காலி துறைமுக வளவில் நடுவதிலுள்ள தடைகள் யாவை என்பதையும்;

(iii) காலி துறைமுக வளவில் மேற்படி அரச மரக் கன்றை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

(iv) மேற்படி கருத்து வேறுபாட்டைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: சானக மாதுகொட
: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom