இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹித அபேகுணவர்தன அவர்களினால் கேட்கப்பட்ட வினா

381/2025

கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) இலங்கையிலுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(vi) அத்தகைய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
: ரோஹித அபேகுணவர்தன
2025-03-08 ஆம் திகதி 2 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom