இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

302/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வருடாந்தம் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேலே குறிப்பிடப்பட்ட (i) இக்கு அமைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) கடந்த மூன்று ஆண்டுகளில் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தோற்றிய மற்றும் சித்தியடைந்த பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) மேலே குறிப்பிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்று அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?

(ஆ) (i) பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றிருந்தும் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாதென்பதையும்;

(ii) இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்துகொண்ட அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையுடன், கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்காக மதிப்பிடப்பட்ட வருடாந்தச் செலவினை இலங்கை ரூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் யாதென்பதை வெவ்வேறாகவும்;

(iv) கடந்த ஐந்து வருடங்களில் கல்விக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் சதவீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;

அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
: ரவி கருணாநாயக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom