293/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 நவம்பர் மாதம் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, நோயாளர் தங்கும் அறைகள், வெளி நோயாளர் பிரிவு, சாய்சாலைகள், மருந்துக் களஞ்சியங்கள் உட்பட வைத்தியசாலை வளாகம் முற்றாக நீரில் மூழ்கியது என்பதையும்;
(ii) அதன் காரணமாக மேற்படி வைத்தியசாலையின் நடவடிக்கைகள் செயலிழந்தன என்பதையும்;
(iii) நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை வளாகத்தை மென்மேலும் பாதுகாப்பாக பேணிவர வேண்டும் என்பதையும்;
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலை நீரில் மூழ்கியதன் காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சேதம் எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி சேதத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்கு மற்றும் வைத்தியசாலை வளாகத்தை மென்மேலும் பாதுகாப்பாக பேணிவருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : சட்டத்தரணி ரஊப் ஹகீம் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






