இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

292/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நோயாளர் தங்கும் விடுதிகள், வெளிநோயாளர் பிரிவுகள், சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தால் மூழ்கியதென்பதையும்;

(ii) மேற்படி வைத்தியசாலையில் கழிவு நீரை வெளியேற்றவும், மழைநீர் வழிந்தோடவும் வடிகான் தொகுதி இல்லையென்பதையும்;

(iii) நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை வளாகங்கள் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படல் வேண்டுமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) ஆமெனில், மேற்படி வைத்தியசாலை வளாகத்தை மிகவும் பாதுகாப்பாக பராமரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: சட்டத்தரணி ரஊப் ஹகீம்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom