இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நலீன் பண்டார ஜயமஹ அவர்களினால் கேட்கப்பட்ட வினா

188/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை யானை வேலிகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் செலவிடப்பட்டுள்ள தொகை ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் யானை-மனித மோதல்களால் உயிரிழந்த யானைகளினதும், ஆட்களினதும் எண்ணிக்கை மற்றும் சொத்துச் சேதங்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) யானை வேலிகளை அமைப்பதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் செலவிடப்பட்டுள்ள தொகைக்கு நிகராக, யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காததை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) ஆமெனில், யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: நலீன் பண்டார ஜயமஹ
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom