இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவீந்திர பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

181/2024

கௌரவ ரவீந்திர பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி குடும்பங்களுள் இன்றளவிலும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் உறவினர்களின்/நண்பர்களின் வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி குடும்பங்களுக்கு இது வரையில் மாற்று வீடுகள்/ காணிகள் கிடைக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;

(iv) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

(v) எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர் நிலைமைகளின்போது பின்பற்றப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: ரவீந்திர பண்டார
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom