இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் பி. பெரேரா அவர்களினால் கேட்கப்பட்ட வினா

154/2024

கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மன்னாரில் நிறுவப்பட்டுள்ள ''தம்பபவனீ'' காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தின் கொள்ளளவு (Installed Capacity) யாதென்பதையும்;

(iv) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் பணத்தொகை யாதென்பதையும்;

(v) 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை மேற்படி மின்னுற்பத்தி நிலையம் மூலமாக தேசிய மின் கட்டமைப்புக்குச் சேர்க்கப்பட்டுள்ள வலு சக்தியின் அளவு ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மின்னுற்பத்தி நிலையம் காரணமாக இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) அந்த நடவடிக்கைள் எவ்வாறு வெற்றியளித்துள்ளன என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மன்னார் தீவில் மேலும் காற்றாளை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின் கொள்ளளவு யாதென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: அஜித் பி. பெரேரா
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom