இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

105/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி பரீட்சையின் வினாத்தாள்கள் அல்லது வினாத்தாள்களில் உள்ளடங்கியுள்ள வினாக்கள், மேற்படி பரீட்சை நடைபெற்ற திகதிக்கு முன்னர் வெளித்தரப்பினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

(vi) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
: சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom