இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

102/2024

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி கிலோகிராமொன்றின் சந்தை விலை தனித்தனியே யாதென்பதையும்;

(ii) அரிசி விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், அவ்விலை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்து அரிசி கையிருப்பை பேணிச் செல்லுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அக்கையிருப்புத் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) அரிசி இறக்குமதி தொடர்பான வேலைத்திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
: சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom