இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹண பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

77/2024

கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை வகுத்தமைக்கான நோக்கம் யாதென்பதையும்;

(ii) இன்றளவில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் நன்மைகள் யாவை என்பதையும்;

(iii) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் நிதியத்திற்கு எம்மூலங்களிலிருந்து நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பதையும்;

(ii) அச்சபையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: ரோஹண பண்டார
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom