இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

70/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1982 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி – 2 பிரதேசத்தில் சீனோர் வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதை அறிவாரா;

(ii) மேற்படி வீடுகள்/காணிகளுக்கான உரித்து உறுதிகள் இதுவரை வழங்கப்படாததால், அவற்றில் வசிப்பவர்கள் அந்த வீடுகள்/காணிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதையும் அறிவாரா;

(iii) ஆமெனில், அந்த வீடுகள்/காணிகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(iv) எக்காலப்பகுதியில் அந்த உறுதிகள் வழங்கப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
: இலங்கை தமிழ் அரசு கட்சி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom