இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

64/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை - தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு, கோறளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஆறு இலட்சம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் உள்ளதென்பதையும்;

(ii) ஆயினும், மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என வர்த்தமானியில் வெளியிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
: இலங்கை தமிழ் அரசு கட்சி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom