இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

6/2024

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பதிவாகிய திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி சம்பவத்திற்காக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தை விசாரணை செய்த பாதுகாப்பு அலுவலர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(ii) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது அந்தப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அழுத்தம் பிரயோகித்த அப்போதைய ஆளுநர்கள் மற்றும் அரசாங்கத்தில் பலம்வாய்ந்த நபர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
: ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom