பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யுனெஸ்க்கோவிற்கான (UNESCO) இலங்கை தேசிய ஆணைக்குழு' சட்டமூலம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் |
திகதி : | 2024-05-20 |
கடந்த 2024.02.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யுனெஸ்க்கோவிற்கான (UNESCO) இலங்கை தேசிய ஆணைக்குழு' சட்டமூலம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (மே 09) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் இதற்கு முன்னரும் கலந்துரையாடப்பட்டதுடன், அதன் இரண்டாவது கட்டமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உத்தேச ஆணைக்குழுவின் அமைப்பு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பில் குழுவின் முன்மொழிவுகளும் திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.
குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அசங்க நவரத்ன மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கல்வி அமைச்சின் செயலாளர், யுனெஸ்க்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகரிகள் சிலரும் குழுவின் இளைஞர் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








